முதல்வர் விஜய் மனைவி சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் 24-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், தமக்கு விவாகரத்து வழங்கவும், நிரந்தர ஜீவனாம்சம் வழங்கவும் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மேலும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த விசாரணையில் விஜய் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கின் அடுத்தகட்டம் குறித்து அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.