தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்
இன்று அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் முன்பு சிவகார்த்திகேயன் குடும்பமாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.