Share On
மாவட்ட செய்திகள்

"அமைச்சரை காணோம்" அதிருப்தியில் தூத்துக்குடி தொகுதி மக்கள்; அடிப்படை பிரச்சனையில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு!!

Admin 1 hour ago தூத்துக்குடி
குடிநீர் பிரச்சனையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தாதது ஏன்? வல்லநாடு நீராதாரத்தை நேரில் பார்வையிடாதது ஏன்? – தொகுதி மக்கள் சரமாரி கேள்வி

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் மெயின் வால்வு பழுது உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழுதுகளை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது குடிநீர் விநியோகம் படிப்படியாக சீரடைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அமைச்சர் ஸ்ரீநாத் தூத்துக்குடியில் இருந்தபோதிலும், குடிநீர் பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அல்லது அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வரும் முக்கிய நீராதாரமான வல்லநாடு ஆற்றுப்படுகையிலும் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் நேரடியாக வல்லநாடு பகுதிக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக ஸ்ரீநாத் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பாக குடிநீர் போன்ற அத்தியாவசிய பிரச்சனை ஏற்பட்டுள்ள நேரத்திலும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக தலையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணாதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, குறிப்பாக குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அமைச்சர் ஸ்ரீநாத் இனியாவது நேரடியாக களத்தில் இறங்குவாரா? என்பது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவும், கேள்வியாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

6 minutes ago

தூத்துக்குடிக்கு குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது,ஆற்றுக்குள் இறங்கி ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

1 day ago

தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் !!

1 day ago

ஆதிக்க சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

1 day ago

சினிமாவில் நடித்த விஜய், தற்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார்” – தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

2 days ago

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

3 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement