Share On
மாவட்ட செய்திகள்

மாநகராட்சி ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வஉசி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உறுதி

Admin 1 hour ago தூத்துக்குடி
வஉசி சந்தை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு – 70 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகளுக்கு ‘உழைப்பின் சிகரம்’ விருது
தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் அன்புராஜ் தலைமையில், செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளர் மரகதராஜ் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் வரவு–செலவு கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், சங்க வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ் ஆகியோர் பேசுகையில், வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

பல்வேறு அமைப்புகளின் புகார்களின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படி வஉசி சந்தை பகுதியிலும் உள்ள சில ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு வஉசி சந்தை ஐக்கிய வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, நமது தொழிலுக்கு நாமே பாதுகாப்பு என்ற அடிப்படையில் செயல்படுவோம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு ‘உழைப்பின் சிகரம்’ விருது வழங்கப்பட்டது. மேலும், உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிகர்கள் சங்க பேரவை மாவட்டத் தலைவர் சோலையப்பராஜா, பொருளாளர் ஆனந்தகுமார், ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைத்தலைவர்கள் பட்டுராஜா, சண்முகராஜ், துணைச்செயலாளர்கள் கஷ்மீர், செல்வசேகர், உத்திரபாண்டி, கௌரவ ஆலோசகர்கள் செல்வக்குமார், சண்முகம், கதிரேசன், குருசாமி, ஜோசப் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஐக்கிய நாடார் சங்க செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நள்ளிரவில் களமிறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி: இருசக்கர வாகனத்தில் 3 மணி நேரம் தெருத்தெருவாக ஆய்வு!!

41 minutes ago

தூத்துக்குடியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

2 hours ago

"அமைச்சரை காணோம்" அதிருப்தியில் தூத்துக்குடி தொகுதி மக்கள்; அடிப்படை பிரச்சனையில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு!!

3 hours ago

தூத்துக்குடிக்கு குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது,ஆற்றுக்குள் இறங்கி ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

1 day ago

தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் !!

1 day ago

ஆதிக்க சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

2 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement